well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 12 ஜூன், 2012

நீயின்றி நானா ?


என் உணர்வுக்குள் நீ  
பூத்தாய் உயிர்ப் பூவாய் 
வசந்தத்தின் வருடல்கள் 
வாசலில் உன் வரவால்

உன்னை நினைக்கையிலே 
உள்ளத்தில் ஓர் உவகை 
எண்ணிப் பார்க்கையிலே 
நினைவுகளில் குதூகலிப்பு

வண்ணப் பெண்மயிலே 
வனப்பான என்னுயிரே 
கண்ணின் மணியான 
கருமணியே என்னவளே

விண்ணில் நிலவாகி நீ 
ஒளிர்வாய் எனக்காக 
மண்ணில் உன்னோடு 
என் வாழ்வே வரமாக ..!

உன்னாலே பெண்ணே


என் 
உறக்கத்தில் நீ 
விழித்துக்கொண்டே இருந்தாய் 
கனவுகளாய்....

இன்று
என் உறக்கத்தை
தொலைத்துவிட்டு நீயோ 
நின்மதியாய் உறங்குகின்றாய் ...

உன் இமைகள் 
கொஞ்சும்போதேல்லாம் - என்
இதயம் கெஞ்சுகின்றது
உன் அன்பிற்காக...

நீயில்லா காரண


 
கண்கள் விட்ட கண்ணீர்
எதுவாக இருக்கும்
நீ இல்லா காரணங்களில்?
அவைகளாகத்தான் இருக்கமுடியும்
நீயில்லா காரணங்கள்.

வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..