என் உணர்வுக்குள் நீ
பூத்தாய் உயிர்ப் பூவாய்
வசந்தத்தின் வருடல்கள்
வாசலில் உன் வரவால்
உன்னை நினைக்கையிலே
உள்ளத்தில் ஓர் உவகை
எண்ணிப் பார்க்கையிலே
நினைவுகளில் குதூகலிப்பு
வண்ணப் பெண்மயிலே
வனப்பான என்னுயிரே
கண்ணின் மணியான
கருமணியே என்னவளே
விண்ணில் நிலவாகி நீ
ஒளிர்வாய் எனக்காக
மண்ணில் உன்னோடு
என் வாழ்வே வரமாக ..!