well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

உன் நினைவு



உன் நினைவு இல்லாத தேசம் 

எது என்று சொல் அங்கே சென்று 

விடுகிறேன்,உன் நினைவுகளின் வலியை 

என் இதயத்தால் தாங்க முடியவில்லை...!!

உனது காதல்



மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு

தான் தெரியும்.நீ காதலிப்பது

எனக்கு மட்டும்
தான் புரியும்

உனது காதல்
நினைவுகளை சுமக்கும்

தாய்
ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்

காதல்


உன் காதல் பொய்

என் காதல் மெய்

யார் ஜெயித்தது

நீயா? நானா?

நீ என்னை மறந்து

நான் உன்னை நினைத்து

நினைப்பதை விட..

மறப்பது கடினமே!!!

உண்மையான அன்பு



நேசித்த போதெல்லாம் நேசித்தேன்!!

என்பதல்ல உண்மையான அன்பு...

வெறுத்த போதும் நேசித்தேன்!!

என்பதே உண்மையான அன்பு...

வியாழன், 22 ஆகஸ்ட், 2013




ஓரு ஆணுக்கு சந்தோசத்தையும்
வலியையும் ஓரு பெண்ணால்
மட்டுமே முழமையாக கொடுக்க
முடியும்♥♥


எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின்
கடந்த காலத்தை மறக்க வைக்க
முடிகிறதோ அவள் தான் அந்த ஆணின்
எதிர்காலம் ஆகிறாள் . . .

வெள்ளி, 28 ஜூன், 2013

காதலி


எங்கு பார்த்தாலும் காதலர்கள்

என்னை தான் காதலிக்க யாரும் இல்லை

என்று வீடு திரும்பினேன்

எனக்காக சாப்பிடாமல் என் “அம்மா” !

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

காதல் கவிதைகள்..!!: எவ்வாறு எல்லாம் உன்னை...?

காதல் கவிதைகள்..!!: எவ்வாறு எல்லாம் உன்னை...?: உன்னை நேசிக்க நான் யோசிப்பது இல்லை நான் யோசிப்பதே எவ்வாறு எல்லாம் உன்னை நேசிக்கலாம் என்பதற்காகத்தான்...

விழிகளில் நீ…



கைக்கெட்டாமல் நீ, காதல்
கரைசேராமல் நான்,
கரையும் கண்களுக்கு, உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில், என்
விழிகளில் நீ…

மரணமே என்னை நெருங்காதே......



சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்...
கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......

உன் நினைவுகள்



உன் நினைவுகள் என்னில்
உருகிக்கொண்டிருக்கிறேன் !!
உயிருக்குள் உன் நினைவுகள்
உயிரற்ற ஜடமாகி உலகில் நான் !!!
உயிர்பிரியும் தருணத்திற்காய்
உன்னையே யசித்துக்கொண்டு !!!

சனி, 19 ஜனவரி, 2013

எவ்வாறு எல்லாம் உன்னை...?


உன்னை நேசிக்க

நான் யோசிப்பது இல்லை

நான் யோசிப்பதே

எவ்வாறு எல்லாம் உன்னை

நேசிக்கலாம் என்பதற்காகத்தான்...

எனக்கும் வலிக்கும்


உன் அர்த்தமற்ற கோபத்தினால்
காயபடுவது என் மனமட்டுமல்ல
என் காதலும் தான்
விளக்கம் சொல்லி விளங்க வைக்க
காதலின் வலி எளிதல்ல
ஒன்றும் சொல்லாமல் உணர வேண்டும்
எனக்கும் வலிக்கும் என்று..<3

தேடி கொண்டு இருக்கிறேன் நம் காதலை..?



                 தனிமையில் இருக்க
பயம் ஓன்று இல்லை
எனக்கு
உன் நினைவுகள்
இரு(ற)க்கும் வரை
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
பதித்த முத்தத்தின் கதகதபையும்
எண்ணி கொண்டே
இரு(ற)க்கிறேன்
வந்து போகின்ற நினைவலைகளில்
அன்றொரு நாள்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,