well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உன் ஒரு வார்த்தைக்காக...


என் இதயத்திற்கு இதமானவனே!
என் ஒரு துளி கண்ணீரில்
கரைந்த நீ....மீண்டும்
ஒரு சொல்லால் என் இதயத்தை
காயப்படுத்திவிட்டாயே!
இருந்தும் நான் உயிர் வாழ்கிறேன்
ஏனென்றால்.....
அந்த இதயமே நீயே என்பதால்!
அதனால் தான் பேச மறந்து
மௌனத்தை எனக்கு பரிசாக
தந்தாயோ????


இதயம் உடைகிறதே


'
என் இதயம் இதயம்
உடைகிறதே
உன் வதனம் காண 
அலைகிறதே 
நரம்புகளில் உன் நினைவுகள்
ஊடுருவுகிறதே 
தொலைதூரம் இருந்தும் 
தொலையவில்லை என் காதல் 

காதல்


♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥❀♥
                                                           மழைக்கு அழத்தெரியும்
 ஆனால் சிரிக்கத்தெரியாது 
சூரியனுக்கு எரிக்கத்தெரியும்
 ஆனால் அணைக்கத்தெரியாது 
எனக்கு நினைக்கத்தெரியும் 
ஆனால் மறக்க தெரியாது..
☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮

அழகு

'
உன்னை பார்த்தவுடன் காதலித்திருந்தால்
 நீ என்னை விட்டு போனவுடன் மறந்து விட்டு வாழ்ந்திருப்பேன்
 உன்னைப் பழகிப் பார்த்து காதலித்ததால் 
நீ விலகிப் போன பின்பு மரித்துப்போயும்
 வாழ்ந்துக்கொண்டிருகின்றேன் !!!

உயிரே.....


Photo: உயிரே..... 

நான் உயிருடன் இருப்பது 
எல்லோருக்கும் தெரியும்... 

நான் நடைபிணமாக இருப்பது 
யாருக்கு தெரியும்... 

உன் நினைவு மட்டும் 
எனக்கு நிரந்தரம்... 

என் உயிர் உனக்கு 
மட்டும் சொந்தம்... 

அலைகிறேன் நான் நடைபிணமாக 
உன் நினைவில்.....
            நான் உயிருடன் இருப்பது 
                                                      எல்லோருக்கும் தெரியும்..
                                                     நான் நடைபிணமாக இருப்பது 
                                                                    யாருக்கு தெரியும்..

                                      உன் நினைவு மட்டும் 

                                                                            எனக்கு நிரந்தரம்...

                                                                  என் உயிர் உனக்கு 

                                                           மட்டும் சொந்தம்...

                                              அலைகிறேன் நான் நடைபிணமாக 

                                                              உன் நினைவில்....



பிரிவு




உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை
                                          உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை                                                                    உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்  ஆனால்உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும் !!!

செவ்வாய், 12 ஜூன், 2012

நீயின்றி நானா ?


என் உணர்வுக்குள் நீ  
பூத்தாய் உயிர்ப் பூவாய் 
வசந்தத்தின் வருடல்கள் 
வாசலில் உன் வரவால்

உன்னை நினைக்கையிலே 
உள்ளத்தில் ஓர் உவகை 
எண்ணிப் பார்க்கையிலே 
நினைவுகளில் குதூகலிப்பு

வண்ணப் பெண்மயிலே 
வனப்பான என்னுயிரே 
கண்ணின் மணியான 
கருமணியே என்னவளே

விண்ணில் நிலவாகி நீ 
ஒளிர்வாய் எனக்காக 
மண்ணில் உன்னோடு 
என் வாழ்வே வரமாக ..!

உன்னாலே பெண்ணே


என் 
உறக்கத்தில் நீ 
விழித்துக்கொண்டே இருந்தாய் 
கனவுகளாய்....

இன்று
என் உறக்கத்தை
தொலைத்துவிட்டு நீயோ 
நின்மதியாய் உறங்குகின்றாய் ...

உன் இமைகள் 
கொஞ்சும்போதேல்லாம் - என்
இதயம் கெஞ்சுகின்றது
உன் அன்பிற்காக...

நீயில்லா காரண


 
கண்கள் விட்ட கண்ணீர்
எதுவாக இருக்கும்
நீ இல்லா காரணங்களில்?
அவைகளாகத்தான் இருக்கமுடியும்
நீயில்லா காரணங்கள்.

வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..

புதன், 25 ஏப்ரல், 2012

!! வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான் !!!


உனையும் எனையும் 
பிரிக்கிறார்களாம் 
ஏதும் அறியாக் 
காதல் செய்ததால்

தேகம் பாராமல் 
தேன் கிண்ணமாய் 
இனிக்கும் காதலை 
தேகத்தால் பிரிக்கப் 
பார்கிறார்களாம்

தேசம் தாண்டி வந்த 
காதல் என்பதால் 
தேள் என வார்த்தையால் 
கொட்டுகிறார்கள்

என் ....... நீயானால்..!



என் வானில் நீ நிலவாய் இராதே..!
தேய்ந்து விடுவாய்..
என் செடியில் மலராதே..!
உதிர்ந்து விடுவாய்..

என் கண்ணில் கனவாகாதே..!
கலைந்து விடுவாய்..
என் இமையில் மையாகாதே..!
கண்ணீரில் கரைந்து விடுவாய்..

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

என் கல்லறைவரை நீதான்





உணர்வாக என்னில் நீ 
நேசத்தை கொடுத்து
உனக்காக என் இதயத்தை 
முழுமையாக இடம் பிடித்து
உறங்காத பாசத்தை உன்னில் 
நான் தொடுக்க வைத்தாய்

விதிவிலக்காக...!



சுழலும் பூமி 
சிதைந்திடும் போது
சொர்க்கம் நரகம் - நாம் 
கண்டிடலாமோ...?

விஞ்ஞானம் எதையும்... 
சொல்லவேயில்லை...!
வெட்டியாய் வார்த்தை... 
விட்டுத்தான் என்ன...?

சுற்றுது பூமி...! 
அது உண்மை...!! 
சுழற்சியும் பூமியின்...! 
ஒரு தன்மை...!!

பிரியாதே உயிரே..


காலம் கலைத்து விட்ட கனவுகளுடன் 
வறுமையும் விரக்தியும் விடாமல் விரட்டியடிக்க 
ஓயாமல் ஓடி ஓடி கால் இடறி விழுந்த என்னை 
மார்பில் தாங்கி கொண்ட காதலன் நீ தானே...

வேதனையின் விளைச்சலில் அணை மீறி 
பாய்ந்த என் விழி நீர் நிலம் தொடும் முன் 
கைகளில் ஏந்தி கொண்ட தோழனும்  நீ தானே...
மஞ்சள் தாலியும் மடியினில் மழலையும் 
தந்த என் மன்னவனும் நீ தானே..



இருளிலும் விடிகின்ற நீ...


நிலவொன்று நடந்து வருகின்ற அதிசயமும்
அழியாத ஒவியமாய் என்னிதயத்தில்
அதன் பாதச்சுவடுகள் பதிந்து வருகின்ற
இனனோர் அதிசயமும் 
காதலில்தான் உள்ளதோ...?

வளர்பிறையும் தேய்பிறையும் - உனது
ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுகிறது
அதேபோல்தான் என்னை அழவைப்பதும்
சிரிக்கவைப்பதும் உனது இன்பமாய்யுள்ளதோ..?

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

காதல் வானில்


இளமனம்
சுகம் தேடி
கதல்வானில் பறக்குதடி...

நீ சொன்ன
ஒரு வார்த்தை
என்னை உயிர்வாழ சொல்லுதடி...

விடியாத
என் உலகம்
உன்பார்வை கண்டு விடியுதடி...

புரியாத
பல வினாக்களுக்கு
இன்று விடைதெரிந்து போனதடி.....

நீதானே...!!!


பூமிக்கு சுழற்சியை...
கொடுத்தவள்  நீதானே...!

பகலுக்கு ஒளியை...
அளித்தவள் நீதானே...!

இரவிற்கு நிலவை...
இரந்தவள் நீதானே....!

நதியையும் கடலையும்....
இணைத்தவள் நீதானே...!
 
காதலுக்குள் மோதலை...
சேர்த்தவள் நீதானே...!

திங்கள், 2 ஏப்ரல், 2012

கவிதையைக் கண்ணீராய்



ஊரறியாப் பெண்மை 
உன்னை உணர வழி இல்லையே 
பெயரறியாக் கன்னி உன்னில் 
கலக்க வழி தேவையே ...

சுடிதார் சொர்க்கமுனை உயிரில்
சுமக்க வழி தேடியே
சுமப்பேன் என் கனவில் 
உன் நினைவுத் தொல்லையே ...

எனை நோக்கா உன் பார்வை 
எட்ட வழி புரியவே 
எட்டி நின்றே உனை ரசித்தேன் 
ஓரக் கண்ணால் கொஞ்சமே ...

அண்ணலும் நோக்க அவளும் நோக்க



மாடத்தில் அவளும்
மண்ணில் அவனுமாக
கண்கள் மட்டுமே
கதைத்து கொண்டன.

அன்று ஜனகனின்
மகளுக்கு வாய்த்தது
பின்பு பல யுகம் கழிந்து
இந்த ஜனகனுக்கு வாய்த்திருக்கு.

அண்ணலும் நோக்க
அவளும் நோக்க
என்ன தவம் செய்தேனா

உணர்வாய் என்றும் நீதானே...!!




விழி சிந்தும் மழையில் 
இரத்தம் சிந்தியது என்னிதயம்...
மனது வாடிப் போன காயத்தால்....

உன் சுவாசம் மூச்சாய் 
என் இதயவறைகளில்....
மூச்சு திணறிப்போகிறேன் 
உன்னை நினைக்கையில்....

உன்னுள்ளே சிறைப்பட்டுப் 
போக நினைத்தவள் 
என்னுள்ளே அடைபட்டேன் 
உனைக் காணாமல்...

வெள்ளி, 9 மார்ச், 2012

முப்பொழுதும் உன் கற்பனையே...



உன் கருவிழியில் கருவாக 
என் காதலானது கண்டேன் 
கச்சிதமாய் பிடித்துக்கொண்டாய் 
என் நெஞ்சத்தை...

எல்லாம் நேர் மாறாக நடக்கிறது 
நேரமும் நெடு நாளாய் அதே 
நாளிகையை காட்டுகிறது... 
பகலும் இரவானது 
இரவும் பகலானது...

நெல் மணி போல் 
சிதறியது சிந்தனைகள் 
பங்கசு போல்
பற்றிக்கொண்டது 
சஞ்சலமும் பதற்றமும்...

உன்னை நினைக்கையில் 
பல்லியும் ஒலி எழுப்புகிறது... 
பால் நிலவும் கரைகிறது..

காதல்


 
காதல் மதி மயங்கும் நிலையெனில் 
 அந்த நிலை எனக்கு,
காதல் கனவுலக வாழ்க்கையெனில் 
 அந்த வாழ்வெனக்கு,

காதல் வாலிப கிறுக்கெனில் 
 அது எனக்குள்ளும் இருக்கு,
காதல் கண்கட்டு வித்தையெனில் 
 அது கட்டியது என் கண்களை.

காதல் தொலைதூர பயணமெனில் 
 அதில் தொலைந்தவன் நான்,
காதல் கிரிக்கெட் என்றால் 
 நான் ஆனேன் கிளீன் போல்ட்.

வெள்ளி, 2 மார்ச், 2012

இதயமும் சருகாகி போகிறதே ,,,!



பாசத்தின் பணிவோடு 
பலநாளாய் காத்திருக்கிறேன் 
வேஷத்தை பாசமென்று நம்பி 
வேதனையில் போவதேனம்மா

அன்பிலே ஆழமும் கண்டு 
அகத்திலே இடமும் கொண்டு 
அணைத்திடும் நாள் வருமென்று 
ஆவலுடன் பார்த்திருக்கிறேன் 
அரவணைத்தவர்கள் வார்த்தையிலே 
அடிமையாகி நீ போவதேனம்மா

சதியெனும் தீயினிலே 
இதயமும் சருகாகி போகிறதே 
இன்பத்தை இழந்து 
இருளிலே முழ்கிறது வாழ்வு 
இனிமேலும் நீ வராமல் போனால் 
இறந்திடும என் ஜீவன் ,,,!

காதல் என்பது கனிவான பேச்சு...!


'
காலம் நாலு பருவமாச்சு - என் 
காதல் உன் மேலாச்சு...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சு...!
சாதல் வரை சந்தோசமாச்சு...!!
 
இன்பம் தருதல் உனக்கான பேச்சு - என்னை 
சந்தோசப்படுத்தலே உன் வேலையாப்போச்சு...
துன்பம் எமக்குள் இல்லாமலாச்சு...!
சொர்க்கத்திலே எமது வாழ்வாகிப்போச்சு...!!
 
கோபம் சில முறை வந்தாகிப்போச்சு....
ஊடல் கூட பல முறையாச்சு...!
பிரிதல் எமக்குள் நடவாத பேச்சு...!!
அலட்டுதல்தானே நாள்தோறும் பேச்சு...!!!

காத்திருக்கு மூச்சு !!!




காதலாய்ச்  சிரித்தாய் 
கை நீட்டி அணைத்தாய் 
கண்விழித்தேன் நிஜமென்று 
கனவு என்று சொன்னது 
கண்ணீர் காய்ந்த விழிகள்....

காத்திருந்த காலங்கள்
கழிந்தன  ஒரு நொடியில்....
கை வலிக்க வரைந்த கவிகள் 
கரைந்து போயின வளியில்.....
கண்ணீரும் காய்ந்தன விழியில்....


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

உயிர்க் காதல்


என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் கண்ணீர்
பெருக்கெடுத்து வருகிறது....

நீயென் தோள்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது....

வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்....

என்னோடும் எப்போதும்......



சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம் 
என் வலியின் பிரசவிப்பாய்....

சில்லென்ற ஒரு காதலென 
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே 
சீரழிந்து போனதாய் என் காதல்...

சனி, 25 பிப்ரவரி, 2012

வலிக்கிறது என் இதயம் ...


ஜாதி மதங்களை கடந்ததாம் காதல் 
பலர் சொல்ல நான் இதை கேட்டதுண்டு ...
நீ சொல்லி தான் தெரிந்தது இன்று 
உயிருள்ள காதலை விட 
உணர்வற்ற ஜாதி உயர்ந்தது என்று

என் கண்கள் பார்த்து 
உன் காதல் சொல்லும் போது 
தெரியவில்லையா 
நான் தாழ்ந்த ஜாதி பெண் என்று

எத்தனை கனவுகள்! 
எத்தனை வாக்குறுதிகள்! 
என் உயிர் துடித்து கதற கதற 
உன் அப்பாவின் 
ஜாதி வெறி பிடித்து 
கொழுந்து விட்டு எரியும் தீயில் 
அள்ளி வீசி விட்டாய்...

கண் மூடுமா நட்பு?


நம் காதலுக்கும் நட்புக்கும்
நூலிழை வித்தியாசம்

நம் காதல்
கோழையானால் நட்பாகவும்
வீரமானால் காமமாகவும் 
ஒரு கோழைவீரனாய் 
களமாடினாலும்
இதயத்தை வெல்லும்..

என் பார்வை தவறுதலாக
உன் முகம் தாண்டி
உடல் மேயும் தருணத்தில்
நீ காரி உமிழ்ந்து
கன்னத்தில்  அறைந்திருந்தால்
உயிர்பிழைத்திருப்பேன்
நீ வெட்கித்தலை குனிந்தாய்
நான் கல்லறையானேன்....

அவன் வருவான்........


நனைந்த என் வழிகளை
அவன் விழியால் துடைத்து 
பூட்டிய என் இதயத்தில்
புன்னகையை மலர விட்டு 
பூவாகப் பூக்கவைக்க
புனிதமாக வாழ்திடும் - என் 
புதியவன் அவன் வருவானா......?

என் கடந்த காலத்திற்கு செவிகொடுத்து
என் நிகழ்காலத்தை மெருகூட்டி
என் மனக்காயங்களுக்கு மருந்திட்டு
என் எதிர்கால வாழ்விற்கு உருக்கொடுக்க
உதய சூரியனாக அவன் வருவானா........?


உயிர்வாழும் காலம் வரை



மலர்களுக்கே மகுடம் 
சூட்டும் ரோஜாவே
என் மனதின் 
யாசகங்களை அறிவாயா?

உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்

உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா 
என தவிக்கின்றேன்

வியாழன், 23 பிப்ரவரி, 2012

காதல்



மனசுக்குள் இருக்கும் 
மத்தாப்பூச் செய்தியை
உன் சிரசுக்குள் செலுத்த
நான்பட்ட சிந்தையென்னவோ.

இத்தனையும் கடந்து
இன்புற்று வாழ்தல்தான் காதலோ
அது இல்லாமல் போனால்
அதுதான் சாதலோ........

வாழ்தலோ சாதலோ...
சரித்திரம் படைப்பது காதலே.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அகத்தின் வலி



தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும் 
எழுதப்படாமலேயே இருந்தது

அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை 
உயில் எழுதிச் சென்றாய்

அதைப்படிக்க படிக்க 
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது

சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொலிக்கிறது

உனக்காய் என் இதயம்....



கண்ணீரில் நான் எழுதும் 
கவிதை யாவும் 
கண்ணா உன் பேர் மட்டும் தான் சொல்லும்
கன்னி என் எண்ணம் யாவும் 
நீ மட்டும் தான் என்றும்....

கனவில் உன்னோடு 
நான் வாழும் காலம் யாவும் 
கலைந்தோடும் மேகமாய் 
ஆகிப் போகுமோ ?
கலங்கிய உளமது கேட்கிறது 
வாய் திறந்து சொல்ல நீ 
வாராயோ விரைந்து...

காதலா? சாதலா?



உயிரே கண்களைப் பிடுங்காதே 
உடலை உருக்காதே 
உண்மை ஒன்றை சொல் 
உனக்காய் இழந்த என்னை 
உதறிப் போகதே

விழிகளை மூடிக் கொண்டே -என்
விதியினை மாற்றி விட்டாய்
வினையாய் வளர்ந்த காதலால்-ஏன்
விரல்களை சுட்டுவிட்டாய்
விடையின்றி எங்கோ சென்றாய்