ஞாயிறு, 20 ஜனவரி, 2013
காதல் கவிதைகள்..!!: எவ்வாறு எல்லாம் உன்னை...?
காதல் கவிதைகள்..!!: எவ்வாறு எல்லாம் உன்னை...?: உன்னை நேசிக்க நான் யோசிப்பது இல்லை நான் யோசிப்பதே எவ்வாறு எல்லாம் உன்னை நேசிக்கலாம் என்பதற்காகத்தான்...
விழிகளில் நீ…
கைக்கெட்டாமல் நீ, காதல்
கரைசேராமல் நான்,
கரையும் கண்களுக்கு, உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில், என்
விழிகளில் நீ…
மரணமே என்னை நெருங்காதே......
சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்...
கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......
உன் நினைவுகள்
உன் நினைவுகள் என்னில்
உருகிக்கொண்டிருக்கிறேன் !!
உயிருக்குள் உன் நினைவுகள்
உயிரற்ற ஜடமாகி உலகில் நான் !!!
உயிர்பிரியும் தருணத்திற்காய்
உன்னையே யசித்துக்கொண்டு !!!
உன்னையே யசித்துக்கொண்டு !!!
சனி, 19 ஜனவரி, 2013
எவ்வாறு எல்லாம் உன்னை...?
உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்...
எனக்கும் வலிக்கும்
உன் அர்த்தமற்ற கோபத்தினால்
காயபடுவது என் மனமட்டுமல்ல
என் காதலும் தான்
விளக்கம் சொல்லி விளங்க வைக்க
காதலின் வலி எளிதல்ல
ஒன்றும் சொல்லாமல் உணர வேண்டும்
எனக்கும் வலிக்கும் என்று..<3
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)