well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

உயிர்க் காதல்


என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் கண்ணீர்
பெருக்கெடுத்து வருகிறது....

நீயென் தோள்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது....

வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்....

என்னோடும் எப்போதும்......



சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம் 
என் வலியின் பிரசவிப்பாய்....

சில்லென்ற ஒரு காதலென 
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே 
சீரழிந்து போனதாய் என் காதல்...

சனி, 25 பிப்ரவரி, 2012

வலிக்கிறது என் இதயம் ...


ஜாதி மதங்களை கடந்ததாம் காதல் 
பலர் சொல்ல நான் இதை கேட்டதுண்டு ...
நீ சொல்லி தான் தெரிந்தது இன்று 
உயிருள்ள காதலை விட 
உணர்வற்ற ஜாதி உயர்ந்தது என்று

என் கண்கள் பார்த்து 
உன் காதல் சொல்லும் போது 
தெரியவில்லையா 
நான் தாழ்ந்த ஜாதி பெண் என்று

எத்தனை கனவுகள்! 
எத்தனை வாக்குறுதிகள்! 
என் உயிர் துடித்து கதற கதற 
உன் அப்பாவின் 
ஜாதி வெறி பிடித்து 
கொழுந்து விட்டு எரியும் தீயில் 
அள்ளி வீசி விட்டாய்...

கண் மூடுமா நட்பு?


நம் காதலுக்கும் நட்புக்கும்
நூலிழை வித்தியாசம்

நம் காதல்
கோழையானால் நட்பாகவும்
வீரமானால் காமமாகவும் 
ஒரு கோழைவீரனாய் 
களமாடினாலும்
இதயத்தை வெல்லும்..

என் பார்வை தவறுதலாக
உன் முகம் தாண்டி
உடல் மேயும் தருணத்தில்
நீ காரி உமிழ்ந்து
கன்னத்தில்  அறைந்திருந்தால்
உயிர்பிழைத்திருப்பேன்
நீ வெட்கித்தலை குனிந்தாய்
நான் கல்லறையானேன்....

அவன் வருவான்........


நனைந்த என் வழிகளை
அவன் விழியால் துடைத்து 
பூட்டிய என் இதயத்தில்
புன்னகையை மலர விட்டு 
பூவாகப் பூக்கவைக்க
புனிதமாக வாழ்திடும் - என் 
புதியவன் அவன் வருவானா......?

என் கடந்த காலத்திற்கு செவிகொடுத்து
என் நிகழ்காலத்தை மெருகூட்டி
என் மனக்காயங்களுக்கு மருந்திட்டு
என் எதிர்கால வாழ்விற்கு உருக்கொடுக்க
உதய சூரியனாக அவன் வருவானா........?


உயிர்வாழும் காலம் வரை



மலர்களுக்கே மகுடம் 
சூட்டும் ரோஜாவே
என் மனதின் 
யாசகங்களை அறிவாயா?

உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்

உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா 
என தவிக்கின்றேன்

வியாழன், 23 பிப்ரவரி, 2012

காதல்



மனசுக்குள் இருக்கும் 
மத்தாப்பூச் செய்தியை
உன் சிரசுக்குள் செலுத்த
நான்பட்ட சிந்தையென்னவோ.

இத்தனையும் கடந்து
இன்புற்று வாழ்தல்தான் காதலோ
அது இல்லாமல் போனால்
அதுதான் சாதலோ........

வாழ்தலோ சாதலோ...
சரித்திரம் படைப்பது காதலே.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அகத்தின் வலி



தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும் 
எழுதப்படாமலேயே இருந்தது

அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை 
உயில் எழுதிச் சென்றாய்

அதைப்படிக்க படிக்க 
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது

சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொலிக்கிறது

உனக்காய் என் இதயம்....



கண்ணீரில் நான் எழுதும் 
கவிதை யாவும் 
கண்ணா உன் பேர் மட்டும் தான் சொல்லும்
கன்னி என் எண்ணம் யாவும் 
நீ மட்டும் தான் என்றும்....

கனவில் உன்னோடு 
நான் வாழும் காலம் யாவும் 
கலைந்தோடும் மேகமாய் 
ஆகிப் போகுமோ ?
கலங்கிய உளமது கேட்கிறது 
வாய் திறந்து சொல்ல நீ 
வாராயோ விரைந்து...

காதலா? சாதலா?



உயிரே கண்களைப் பிடுங்காதே 
உடலை உருக்காதே 
உண்மை ஒன்றை சொல் 
உனக்காய் இழந்த என்னை 
உதறிப் போகதே

விழிகளை மூடிக் கொண்டே -என்
விதியினை மாற்றி விட்டாய்
வினையாய் வளர்ந்த காதலால்-ஏன்
விரல்களை சுட்டுவிட்டாய்
விடையின்றி எங்கோ சென்றாய்

காதல் செய்யக் கற்றுக் கொடு



உன்னை விட எனக்கு 
உலகம் தெரியவில்லை
விண்ணில் கூட - வட்ட 
நிலவின் முகம் தோன்றவில்லை 

கவியை விட என்னிடம் 
மொழியேதும் இன்று இல்லை - என் 
ஆவியைக் கூட நான் 
அந்நியனாய் தேடும் நிலை..?

தேரின்று விடமாச்சே
தேவதையே புரியவில்லை 
வானளக்காப் பெண்ணழகோ 
வானவில்லோ தெரியவில்லை

தலைவி இரங்கல்


 

பூக்களில் தினமும் உன் 
புன்னகை பார்க்கிறேன்
தென்றலில் உன் 
சுவாசம் தேடி வேர்க்கிறேன்

நீ மிகவும் 
என் அருகில் இருக்கிறாய்
நினைவுகளில்
தினமும் கன்னம் தொடுகிறாய்
கனவுகளில்
தலை கோதிச்செல்கிறாய்

சனி, 18 பிப்ரவரி, 2012

உயிரும் உருகுதடா ,,,!



உரிமையாய் உன்னோடு வாழ
பல ஜென்மம் வேண்டாமடா 
உயிராய் அணைத்திடும் 
ஒரு நொடி போதுமடா

இருளில் வாழ்வது வேண்டமடா 
இறப்பிலும் நீயே வேண்டுமடா
நிமிடங்களும் வருடங்களாகுதடா
நிரந்தரமாய் உனை சேரும் வரை

உனதருகில் நான் இல்லையடா 
எனதருகில் நீயில்லையடா 
உயிராய் காதலை நேசித்தும் 
உப்பில்லா பண்டமானோமடா

காதல்



வெள்ளை காகிதமாய் 
இருந்த​ என் மனதில்
ஒவியம் வரைந்த​ ஒவியனே!

என் உயிர் அணுக்களில்   
காதல் கவிதை 
எழுதிய​ கவிஞனே!

எனக்கே தெரியாமல் 
என் இதயத்தை 
திருடிய​ திருடனே!

உன் மின்சார​ கண்களால்
என்னை கைது 
செய்த​ காவலனே!

உன் மௌனத்தால்  
என்னை கொல்லுவது ஏன்??

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

பெண் பார்வை



பெண்ணே உன் 

சிரிப்பும் பார்வையும் 
செல்லகதைகளும் 
என்னை கொல்லுதடி

உன் வரவுக்காய் 

காலம் எல்லாம் 
காத்திருப்பேன் பெண்ணே 
உன் கண்கள் 
என்னை ஒரு கோடிகாலம் 
வாழ தூண்டுதடி பெண்ணே

என்ன அழகு


மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா
கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா
வஞ்சி அழகா வாய்வெடித்த பூவழகா
குஞ்சம் அழகா கூந்தல் மலரழகா - இல்லை
பஞ்சமில்லா மஞ்சம் அழகா மிஞ்சும் அழகு
மெருகூட்டும் அழகெதென்றால் - வெள்ளை
நெஞ்சம் அழகு நெடுநாட் காதலித்தும்
அஞ்சுதற்கு அஞ்சுகின்ற வஞ்சமில்லா
நெஞ்சமே அழகென்பேன் யான்.

உனக்காக.....


உன்னையே என் மனம் எதிர் பார்க்கிறது
சில நேரம் உன் வராமை கண்டு 
அது செத்துப்போகிறது
தவிக்கும் என் மனம் பறக்கிறது
பறந்த என் மனம் நூலறுந்து தெரிக்கிறது
என்னுடல் செத்துப் பிழைக்கிறது
வேவும் என் கண்கள் திடுக்கிட்டுப் நோக்கும்
நீ வருவதாக உணரும்
ஆனால்...

சில நிமிடங்களில் உணர்வு தளர்ந்து
அயர்ந்து போகும்
நான் உன்னைக் காண வேண்டும்
உன்னோடு சில வார்த்தைகள் பகிர வேண்டும்
சில்மிசங்கள் கொஞ்சம்
பல்வேறு கற்பனை என்றாலும்
எல்லாமே மாயக்கனவுகளின் 
மாற்றங்களாகவே பரிணமிக்கிறது.
என் செய்வேன் நான்
காதல் ஏழை.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

காதல்



ஜாதி மதம் பார்க்காது
நேரம் காலம் பார்க்காது
வரவு செலவு பார்க்காது
முகம் பார்க்காது காதல்

உசிரையும் கொடுக்கும்
உசிரையும் எடுக்கும் காதல்
உறவை இணைக்கும்
உறவை பிரிக்கும் காதல்

உள்ளம் இரண்டும்
உணர்வோடு இணைந்து கொண்டு
உணர்வோடு உயிர் வாழ்வதே
உண்மைக்காதல்

உசிர் உள்ளவரை இரு உள்ளமும்
உயிராக நேசிக்கும் 
நினைவுகளில் வாழும் காதல்
பிரிந்தாலும் நினைவுகளில் வாழும் காதல்
இறந்தாலும் இறக்காது காதல் 

ஒவ்வொரு உயிருக்குள்ளும்
ஒவ்வொரு முகம் மறைந்திருக்கும்
இறுதி வரை வரும் நினனவு
காதல்......

எது ? காதல்!



காதலர் தினம் மட்டும் 
நினைப்பதல்ல காதல் 
காதலர் உயிர் உள்ளவரை 
நினைப்பதே காதல்

ஒற்றை ரோசாவில் 
முடிவதல்ல காதல் 
பிறவி முழுவதும் 
தொடர்வதே காதல்

பரிசுப் பொருட்கள் 
பகிர்ந்து கொள்ளுவதல்ல காதல் 
ஒருவரை ஒருவர்   
புரிந்து கொள்வதே காதல்

கடற்கரையில் பேசுவது 
மட்டுமல்ல  காதல் 
காலம் முழுவதும் இணைந்து     
இருப்பதே காதல்

நானும் காதலிக்கிறேன்


காதல்...
இன்று புன்னகையோடு வரும்
நாளை கண்ணீர் சிந்தவைத்து ஓடிவிடும்
என்றே நினைத்தேன்.

காதல்...
சீச்சீ, கெட்ட வார்த்தை
அது எனக்கெல்லாம் ஒத்து வராது
என்றே கர்வமாக இருந்தேன்.

காதல்...
அப்படி என்றால் என்ன?
நானாவது காதலிப்பதாவது
என்று எகத்தாளமாகப் பேசினேன்.

வருவாளா என் தேவதை?



வருவாளா என் தேவதை? 
எட்டு திக்கும் ஒன்றாய் சேர்த்து 
கிழக்கு வானில் வருவாளா 
என் தேவதை........?

கண்களை ஈரமாக்கி 
கண்ணீர் கடலின் கரையில் 
என் நெஞ்சோரம் வருவாளா 
என் தேவதை...........?

பூந்தேட்டத்தின் மத்தியில் 
பூவின் நடுவே 
வாசம் என வருவாளா 
என் தேவதை..........?

என்ன தவம் செய்தன...?


நீ உறங்கிப்போன இரவுகள்
விழித்துக்கொள்ள நினைக்குமோ..?
அல்லது நீ விழித்தபின்தான்
அவைகள் உறங்கிட நினைக்குமோ.?

என்ன தவம் செய்தன அவைகள்
உன்னுடனேயே ஒட்டி உறாவாடுகிறது
விலகிய தலையணையையும்
ஒதுங்கிக் கொண்ட போர்வையையும்
இரவுகள்தான் மூடிக்கொள்கிறதே...

நீ என்னை காதலித்தது பொய் என்றால்.......



மூவுலகம்  என்பதும்  பொய் ...
முத்தமிழ்  இலக்கியம்  பொய் ...
சுட்டெரிக்கும்  சூரியன்  பொய் ...
சுற்றம்  தரும்  சுகம்  பொய்...

கண்ணின்  கருவிழி பொய் ...
கரு  விழியின் காட்சி  பொய் ...
வண்ணமிகு  வானவில்   பொய் ...
வியக்க  வைக்கும்  அதிசயம்  பொய் ...

உலகை  படைத்த  இறைவன் பொய் ...
உத்தமர்  தம்  உள்ளம்  பொய் ...
பாலின்  வெண்மை  பொய் ...
பகலுக்கு  பின்  வரும்  இரவு  பொய் ...

இரவில்  வரும்  இருட்டு  பொய் ...
இயற்கை தந்த  வளம்  பொய் ...
விண்ணில்  பறக்கும்  விமானம்  பொய் ...
கடலில்  மிதக்கும்  கப்பல்  பொய் ...

படைப்பின்  மகத்துவம்  பொய் ...
பண்பின்  இலக்கணம்  பொய் ...
சான்றோர்  சிந்தனைகள்  பொய் - ஆம் 
சகலமும்  பொய்  தான் ....

நீ  என்னை  காதலித்தது  
பொய்  என்றால் !........

நான் கண்ட பாசம்........


கண்ணுக்குள் என்னை வைத்து
கண்ணீரை காவல் வைத்தான்.........
அவன் மறு பெயர்தான் கம்பீரம் - ஆனால்
தெரிவது எனக்கு மட்டும் தான்.......
நான் கண்ட பாசம்
அழவில்லா நேசம்......
அன்று கண்ணீர் விட்டு 
சுகம் கண்டேன் - இன்று
கண்ணீர் துடைக்க அவன் வந்தான்
இரு கரம் தந்தான்.......
ஏதோ நினைவுகள் வந்து அலைக்களிக்க - நான்
ஆடிப்போய் விட்டேன் ஆழியில் படகாய்........

காதலர் தினமே ..!!



கண்களால் ஒருமித்துக் கலவி செய்து 
உணர்வுகளின் சங்கமத்தால் உயிரில் ஊறி 
நெஞ்சகத்தில் நெகிழ்வோடு கருத்தரித்து
கொஞ்சல்களால் குதூகலித்துக் குலவிக் கூடி 
கெஞ்சல்களின் விரசங்களால் சரசமாடி 
சொந்தமாய்ச் சூல் கொண்டு சுவாசமாகி 
ஆயுள் வரை தொடரும் பந்தமுமாய் ஆகி 
அர்த்தநாரியாய் பிணைந்து விட்ட உறவு 
புதிதாய் எதைத்தான் நாடும் நம் மனமே 
திகட்டாத தேடலில் ஆடுது அனுதினமே  
தினம் தினம் நமக்கிங்கு காதலர் தினமே ..!!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

காதல்…



கண்களில் தொடங்கப்படுகிறது
காகிதத்தில் எழுதப்படுகிறது
கருத்தில் விதைக்கப்படுகிறது
கவர்ச்சியில் சலனப்படுகிறது
கனவுகளில் வளர்க்கப்படுகிறது
கடைசியில் கட்டிலில் கரைந்து போகிறது

"ஐ லவ் யூ"



உறக்கத்தில் இருந்த காதல் 
சிறகடித்து எழுந்து 
காதலனைத் தேடி 
தூதனுப்பி காத்திருந்து 

கண்ணால் கதை பேசி 
காலங்களைக் கடத்தாது 
செவ்வாயால் ஒருமொழி 
செப்ப நினைத்து 

குளிர் நீரில் நீராடி 
வெளிர்நீல துகிலுடுத்தி 
வதனத்தில் திலகமிட்டு 
தெருவிலே வேகமாக இறங்கி 

வெயில் எரித்த போதிலும் 
ஒய்யாரமாக நடந்து 
தையலிவள் காதல்பொங்க 
மையலோடு நாயகனை கண்டு 

கட்டி அணைக்க முயன்று 
எட்டி நின்று வெட்கப்பட, 
உதடுகள் இரண்டு ஒரே நேரத்தில் 
உச்சரித்தன ஒரு வார்த்தையை 
"ஐ லவ் யூ"

கவிதைகள்


உன்னை பார்த்து

கொண்டிருப்பதால் தானோ

இதயம் தினமும்

துடித்துக் கொண்டிருக்கிறது

என் இதயத்திற்கு

உயிர் மட்டும் இல்லை

விழிகளும் இருக்கிறது உன்

இதயத்தை பார்த்துக்

கொண்டே இருக்க

காதல்....!!



பெற்றவரை மறக்கும் காதல்
பெரியவரை மிதிக்கும் காதல்
கற்று வந்த கல்விதன்னை 
கணப்பொழுதில் இழக்கும் காதல்

பைத்தியமாய் ஆக்கும் காதல்
பக்குவத்தை இழக்கும் காதல்
வைத்தியமே செய்ய இயலா
வருத்தம்தான் இந்தக் காதல்

தன்னையே மறக்கும்காதல்
தவறுக்குத் தூண்டும் காதல்
உன்னையே அழிக்கும் காதல்
உயிரையே உருக்கும் காதல்

என் காதல்...


நிலவிவளின் அன்புக் காதலன் 
நீண்டநாளின் பின் எழுதும் 
காதல் கவிதை இது 
காதலியே நீ புரிந்திடு.. 

காதல் என்ற போர்வையில் 
பெண்கள் பின் அலைவதுதான் 
எனது பொழுதுபோக்கல்ல 
பார்த்த விநாடியில் பத்திக்கொள்ள 
என் காதல் பெற்றோல் காதல் அல்ல 
வந்ததும் தெரியாமல் 
போனதும் புரியாமல் விட 
இது மின்னல்காதலுமல்ல 
பலநாட் பழகி ஒருவரையொருவர் 
புரிந்துகொண்ட நம்காதல் 
புனிதமான உண்மைக்காதல் 

உன்னை நான் விரும்பியிருந்தேன்


உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உன் அன்பு



அன்பின் காதல் கோயிலே 
காலமெல்லாம் காத்திருந்து
உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்
ஆனால் இன்று கடல் பிரித்து விட்டதே
உன்னை நினைக்கையில் என் 
கண்கள் கண்ணீராகப் பெருகுகிறதே
உள்ளம் எல்லாம் உருகுதே 
உன்தன் அன்பிற்காகத் துடிக்குதே 
என்றுதான் உன் அன்பு முகம் காண்பேனோ
அன்றுதான் ஆறுதல் காண்பேன்
என்றுதான் உன் அன்பு முகம் காட்டி 
எனக்கு புத்துயிர் கொடுப்பாயோ?

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

காதலின் இனிய சுகம்


காதலிப்பது சுகம்
காதலை சொல்வது சுகம்
காதலில் காத்திருப்பது சுகம்
கவிதை எழுதுவது சுகம்

கனவுகள் காண்பது சுகம்
காதலுக்காக ஏங்குவது சுகம்
காதலுக்காக விழித்திருப்ப்து சுகம்
ஏன் காதலுக்காக போராடுவதும் சுகம் தான்

ஆனால்
காதலின் சுகத்தில் உள்ள சுகங்களை விட
காதலின் சோகத்தில்,
காதலின் வலியில், 
காதலின் வேதனையில் 
உள்ள சுகமே என்றும் இனிமையான சுகம்.

அழகின் பிறப்பிடம் நீயா


பிரம்மன் கனவில் கண்டான் உன்னை அன்று 
நான்  உன்னை நேரில் கண்டேன் இன்று
உன்னை கண்ட நொடிமுதல் 
என் இமைகள் இமைக்க மறந்துவிட்டன

நீ பிரம்மனின் பிரம்மாண்ட படைப்பா ?
அல்லது மோனாலிசாவுக்கு மோடலாக பிறந்தவளா ?
உன்னை சிற்பி  செதுக்காத சிலை என்பதா ?
ஓவியன் வரையாத ஓவியம் என்பதா ?
கவிஞன் எழுதாத கவிதை என்பதா ?
ஒன்றுமே புரியவில்லை என் இளமைக்கு ?

உன் உதட்டில் உள்ள தடங்கள் 
எந்த மொழி  கொண்ட எழுத்துக்கள் 
அதை வாசித்து பயில்வதற்கு 
வரம் ஒன்று கொடுப்பாயா எனக்கு ?