well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 2 மார்ச், 2012

காதல் என்பது கனிவான பேச்சு...!


'
காலம் நாலு பருவமாச்சு - என் 
காதல் உன் மேலாச்சு...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சு...!
சாதல் வரை சந்தோசமாச்சு...!!
 
இன்பம் தருதல் உனக்கான பேச்சு - என்னை 
சந்தோசப்படுத்தலே உன் வேலையாப்போச்சு...
துன்பம் எமக்குள் இல்லாமலாச்சு...!
சொர்க்கத்திலே எமது வாழ்வாகிப்போச்சு...!!
 
கோபம் சில முறை வந்தாகிப்போச்சு....
ஊடல் கூட பல முறையாச்சு...!
பிரிதல் எமக்குள் நடவாத பேச்சு...!!
அலட்டுதல்தானே நாள்தோறும் பேச்சு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக