well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 9 மார்ச், 2012

முப்பொழுதும் உன் கற்பனையே...



உன் கருவிழியில் கருவாக 
என் காதலானது கண்டேன் 
கச்சிதமாய் பிடித்துக்கொண்டாய் 
என் நெஞ்சத்தை...

எல்லாம் நேர் மாறாக நடக்கிறது 
நேரமும் நெடு நாளாய் அதே 
நாளிகையை காட்டுகிறது... 
பகலும் இரவானது 
இரவும் பகலானது...

நெல் மணி போல் 
சிதறியது சிந்தனைகள் 
பங்கசு போல்
பற்றிக்கொண்டது 
சஞ்சலமும் பதற்றமும்...

உன்னை நினைக்கையில் 
பல்லியும் ஒலி எழுப்புகிறது... 
பால் நிலவும் கரைகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக