பாசத்தின் பணிவோடு
பலநாளாய் காத்திருக்கிறேன்
வேஷத்தை பாசமென்று நம்பி
வேதனையில் போவதேனம்மா
அன்பிலே ஆழமும் கண்டு
அகத்திலே இடமும் கொண்டு
அணைத்திடும் நாள் வருமென்று
ஆவலுடன் பார்த்திருக்கிறேன்
அரவணைத்தவர்கள் வார்த்தையிலே
அடிமையாகி நீ போவதேனம்மா
சதியெனும் தீயினிலே
இதயமும் சருகாகி போகிறதே
இன்பத்தை இழந்து
இருளிலே முழ்கிறது வாழ்வு
இனிமேலும் நீ வராமல் போனால்
இறந்திடும என் ஜீவன் ,,,!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக