well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

பிரியாதே உயிரே..


காலம் கலைத்து விட்ட கனவுகளுடன் 
வறுமையும் விரக்தியும் விடாமல் விரட்டியடிக்க 
ஓயாமல் ஓடி ஓடி கால் இடறி விழுந்த என்னை 
மார்பில் தாங்கி கொண்ட காதலன் நீ தானே...

வேதனையின் விளைச்சலில் அணை மீறி 
பாய்ந்த என் விழி நீர் நிலம் தொடும் முன் 
கைகளில் ஏந்தி கொண்ட தோழனும்  நீ தானே...
மஞ்சள் தாலியும் மடியினில் மழலையும் 
தந்த என் மன்னவனும் நீ தானே..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக