
யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு
யார் என்று கேட்டது மனசு
யாவும் இவள்தான் என்றது காதல்
அவளை தேடித் தேடி போனேனே
தேகம் சிலிர்க்க தேய்ந்தேனே
தீண்டும் தீயாய் அவள் நினைவுகள் - தேகம்
தீண்டித் தீண்டி கொல்லுதே
என் காதலின் உருவம் நீயடி
என் இதயத்தை தீண்டுவது ஏனடி
என் விழியின் பார்வை நீயடி
என் கனவினை திருடுவது ஏனடி....