well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 24 ஜனவரி, 2012

காதலன்றி…




என் சாலைகள் உன் துணையின்றி நீள்கின்றன
என் நாட்கள் உன் வழி பார்த்து விடிகின்றன
என் இரவுகள் உன் அணைப்பின்றி கழிகின்றன
என் சுவாசம் உன் வாசமின்றி வாடுகிறது
என் கண்கள் உன் பிம்பம் காணாமல் கண்ணீரைப் பொழிகின்றன
என் இந்த நீண்ட காத்திருத்தல் எப்போது முடிவுக்கு வரும்?
என் காதல் எப்போது உன் மெய் சேரும்?
இனியொரு ஜென்மம் உண்டென்றாலும்
அதில் உன் துணையாகும் வரம் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக