well come to காதல் கவிதைகள்..!!

சனி, 25 பிப்ரவரி, 2012

அவன் வருவான்........


நனைந்த என் வழிகளை
அவன் விழியால் துடைத்து 
பூட்டிய என் இதயத்தில்
புன்னகையை மலர விட்டு 
பூவாகப் பூக்கவைக்க
புனிதமாக வாழ்திடும் - என் 
புதியவன் அவன் வருவானா......?

என் கடந்த காலத்திற்கு செவிகொடுத்து
என் நிகழ்காலத்தை மெருகூட்டி
என் மனக்காயங்களுக்கு மருந்திட்டு
என் எதிர்கால வாழ்விற்கு உருக்கொடுக்க
உதய சூரியனாக அவன் வருவானா........?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக