well come to காதல் கவிதைகள்..!!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அகத்தின் வலி



தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும் 
எழுதப்படாமலேயே இருந்தது

அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை 
உயில் எழுதிச் சென்றாய்

அதைப்படிக்க படிக்க 
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது

சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொலிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக