
தனி வெள்ளைக் காகிதமாய்
என்னிதயம் எதுவும்
எழுதப்படாமலேயே இருந்தது
அதில் நீ வந்து
என்னுயிராய் உன்னை
உயில் எழுதிச் சென்றாய்
அதைப்படிக்க படிக்க
இன்பம் சுரந்து வந்தது
உலகம் மறந்து போனது
சுவர் ஓவியமாய் என்னுள்ளத்தில்
அறையப்பட்ட உன் நிலாமுகம்
பிரகாசமாய் ஜொலிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக