மனிதம் எங்கே?.....
மதி இழந்தவன்---
கதி இழந்தான்....
சதி செய்தவன்---
கதி என்ன?....
மின்னலை என்றும்
தன் வசமாக்க நினைத்தான்....
இயற்கையின் பிடியில்
சிக்கி போன இடம் எங்கே?....
அந்த வானத்தை
தொட நினைத்தான்....
விணவெளி ஓடத்தை
செய்தான்....
பறவை என
பறக்க நினைத்தான்....
பறக்கும் தட்டை
கண்டறிந்தான்....
ஆயுதம் இல்லா
உலகை தேடினான்....
எங்கும் போர்
முழக்கங்கள் தான்....
பூக்களை நேசிக்க
மறந்தவன்
மனிதனை மட்டும்
நேசித்திடுவனா...!
மலைகளிலும் காடுகளிலும்
வழ்ந்தவன்
இன்று குடிசைகளிலும்
அடுக்கு மாடிகளிலும்மாய்
கேட்டால்
நாகரீகமாம்
எது நாகரீகம்?....
இன்று
நாட்டில் இல்லா
மனிதநேயம் தான்
நாகரீகமா...!
இல்லை
மனித இதயத்தில்
வியாதியாய்
பரவி கிடக்கும்
கொடுமைகள் தான்
நாகரீகமா...!
கொடுமைகள் நாட்டில்
அதிகமகிட தான்
சுதந்திரம் என்னும்
பெயரை சொல்லி
அலைகின்றானோ
மனிதன் ஆயுதமாய்....
அதன் விளைவு தான்
தீவிரவாதம் என்னும்
கொடுமையா....
முதல் சுதந்திரமோ
அகிம்சையாய்
மாலை சுடியாதோ அன்று....
இன்றோ
இரத்த கட்டாறுகளாய்....
மனிதம் அழிந்தது....
மனித நோயம் ஓய்ந்தது....
மாண்டு போகும்
உலகம் அதிலே
மயமாய் போகும்
மனிதம் எங்கே?....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக