well come to காதல் கவிதைகள்..!!

புதன், 28 டிசம்பர், 2011

தமிழை நேசியுங்கள் ,,,,


தமிழனாய் பிறந்ததினால்
தாய் நாட்டில்
தாகங்களோடு
தவிப்புகள் மட்டுமே சொந்தமானது
அயல் நாட்டிலும்
அவஸ்தைப் படுகிறேன்
அயல் மொழி தெரிந்தும்
அவதியுறுகிறேன் இன்று
அதையும் அறிந்து விட்டேன்
தமிழன் நான் என்பதாலாம்
நேர்மையை கையாண்டேன்
நெடு நாளாய் தவிக்க விட்டார்கள்
நிம்மதி நான் இழக்கிறேன்
நீதி மறுக்கிறார்கள் காரணம் கேட்கையிலே
நீ தமிழன் என்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக