well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 15 டிசம்பர், 2011

என் கவிதை

                
                            அவளை அப்பனுடன் காண்கையில்
                             கை நடுங்கி
                           கைக்குள்ளிருந்த பேனா மை சிந்தி
                           பிறந்தது இக்கவிதை

அந்த மின்னும் இடை பின்வாங்க
பின்னிய ஜடை முன்வாங்க
அவள்
திரும்பிப்பார்த்ததில்
வளர்ந்தது இக்கவிதை

                           கூடவே வந்த -அந்த
                            இரும்பு மீசைக்கு முன்னால்
                            என் அரும்பு மீசைக்கு முடியாமல்
                            உறுமல் சத்தத்தை கேட்டே
                            முற்றுப்பெற்றது என் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக