அவளை அப்பனுடன் காண்கையில்
கை நடுங்கி
கைக்குள்ளிருந்த பேனா மை சிந்தி
பிறந்தது இக்கவிதை
அந்த மின்னும் இடை பின்வாங்க
பின்னிய ஜடை முன்வாங்க
அவள்
திரும்பிப்பார்த்ததில்
வளர்ந்தது இக்கவிதை
கூடவே வந்த -அந்த
இரும்பு மீசைக்கு முன்னால்
என் அரும்பு மீசைக்கு முடியாமல்
உறுமல் சத்தத்தை கேட்டே
முற்றுப்பெற்றது என் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக