well come to காதல் கவிதைகள்..!!

சனி, 31 டிசம்பர், 2011

மனசு....





திசைகள் இன்றி
திண்டாடிய மனம் ஒன்று
பாவை அவள்
பார்வை தீண்டலினால் 
பக்குவமானது அன்று...

இதய கூட்டினை உடைத்து - அதில்
அவளை தான் இருத்தி
நேசிக்கத் தொடங்கியது அன்று..
படிப் படிப்யாக - அது
இமயமாக வளர்த்து
காதல் என்னும் போர்வையில்
ஆட்சி செய்கின்றது இன்று...

உதிரத்தில் கலந்திட்ட அவள்
உயிருள்ள வரை
உயிர்நாடியாய் தன்னுள்
என்றும் இருப்பாள் என்னும் 
நம்பிக்கையில் காலம் நீள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக