தோழியே!!
மறைந்தாயோ என்னை? - இல்லை
மறக்கடிக்கபட்டாயோ?
என் கவலைகள் மறந்து
மனம் விட்டு பேச
மணிக் கணக்கில்
அரட்டை என்னும் பெயரில்
ஆயிரம் கதை சொல்லி
குதுகலித்திடும் அலைபேசிகள்
சலனமின்றி சமாதியானது
உன் மெளனத்தினால்,
தொலைவாகி போனதால்
தொலைந்து போனதா
உன் இதயம்...?
நெருங்கிட நினைத்தாலும்
வார்த்தையால் வெடிக்கிறாய்
உதிர்ந்திடும் நிமிடங்களில்
சிலிர்த்திடும் சினங்களினால்
சின்னாபின்னமாகிறது
நட்பின் ஆயுள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக