
என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் கண்ணீர்
பெருக்கெடுத்து வருகிறது....
நீயென் தோள்களில்
சாய்ந்து கொள்ளும்போது
என் ஏட்டிலிருந்த மரணம்
அழிந்து விட்டது....
வாழும் உயிர் அர்த்தப்படுகிறது
ஆனந்தம் எல்லையற்றுப்போகிறது
காதல் ஒன்றே உலகமாகிறது
நீயென் செல்வமானதால்....