well come to காதல் கவிதைகள்..!!

சனி, 4 பிப்ரவரி, 2012

வரம் கொடு பெண்ணே வரம் கொடு! ....





உடலாக நானிருக்கின்றேன் - நீ
உயிராய் இருக்க வரம் கொடு ....!
உள்ளமாக நானிருக்கின்றேன் - நீ
உணர்வாய் இருக்க வரம் கொடு ....!
எண்ணமாக நானிருக்கின்றேன் - நீ  
எழுத்தாய் இருக்க வரம் கொடு ....!
சிந்தனையாக நானிருக்கின்றேன் - நீ
செயலாக இருக்க வரம் கொடு ....!
புயல் காற்றாய் நானிருக்கின்றேன் - நீ
தென்றலாக மாற வரம் கொடு ....!
வான வில்லாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ணமாக இருக்க வரம் கொடு ........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக