well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

அழகின் பிறப்பிடம் நீயா


பிரம்மன் கனவில் கண்டான் உன்னை அன்று 
நான்  உன்னை நேரில் கண்டேன் இன்று
உன்னை கண்ட நொடிமுதல் 
என் இமைகள் இமைக்க மறந்துவிட்டன

நீ பிரம்மனின் பிரம்மாண்ட படைப்பா ?
அல்லது மோனாலிசாவுக்கு மோடலாக பிறந்தவளா ?
உன்னை சிற்பி  செதுக்காத சிலை என்பதா ?
ஓவியன் வரையாத ஓவியம் என்பதா ?
கவிஞன் எழுதாத கவிதை என்பதா ?
ஒன்றுமே புரியவில்லை என் இளமைக்கு ?

உன் உதட்டில் உள்ள தடங்கள் 
எந்த மொழி  கொண்ட எழுத்துக்கள் 
அதை வாசித்து பயில்வதற்கு 
வரம் ஒன்று கொடுப்பாயா எனக்கு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக