well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 16 பிப்ரவரி, 2012

காதல்



ஜாதி மதம் பார்க்காது
நேரம் காலம் பார்க்காது
வரவு செலவு பார்க்காது
முகம் பார்க்காது காதல்

உசிரையும் கொடுக்கும்
உசிரையும் எடுக்கும் காதல்
உறவை இணைக்கும்
உறவை பிரிக்கும் காதல்

உள்ளம் இரண்டும்
உணர்வோடு இணைந்து கொண்டு
உணர்வோடு உயிர் வாழ்வதே
உண்மைக்காதல்

உசிர் உள்ளவரை இரு உள்ளமும்
உயிராக நேசிக்கும் 
நினைவுகளில் வாழும் காதல்
பிரிந்தாலும் நினைவுகளில் வாழும் காதல்
இறந்தாலும் இறக்காது காதல் 

ஒவ்வொரு உயிருக்குள்ளும்
ஒவ்வொரு முகம் மறைந்திருக்கும்
இறுதி வரை வரும் நினனவு
காதல்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக