துடிக்கும் இதயத்தையும்
துறுதுறுவென தவிக்கும்
வார்த்தைகளையும்
அடக்கி அடக்கியே
எனக்குள்ளே அழுது
உனக்காக காத்திருப்பேன்...
காத்திருப்பு
கனக்கும் இதயம்
இவைகளுக்கெல்லாம்
காலம் தாழ்த்தாது
என்னை தேடி வரும்
உன் கண்கள்
சிந்தும் புன்னகைதான்
காணிக்கை.....
என்
தலையணைக்கடியில்
உன் பிரிவால்
கரைந்த கண்ணீருடன்
உனக்காக
ஒரு ஜீவன் இன்னும்
காத்திருக்கிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக