கண்ணீரில் கதையெழுதுகிறேன்
காயங்களில் வலி சுமக்கிறேன்
படித்திட முடியலையே
பாவி நெஞ்சு துடிக்குதடி
யார் யாரோ பேசுவார்
வார்த்தைகளில் வசை பாடுவார்
எதிர்த்தாள முடியுமோ - இல்லை
போர் புரியக் கூடுமோ
வெண்முகில் மழையில் நனையுமோ
சூரியன் இருளில் புதையுமோ
அள்ளி அணைத்த காதல்
அரங்கேறுமோ ?
அரவமில்லா ஆசை தான்
நிறைவேறுமோ - இல்லை
சுடர்மிகு தெய்வங்கள் தான்
வழி காட்டுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக