well come to காதல் கவிதைகள்..!!

சனி, 11 பிப்ரவரி, 2012

விலகி நீ ஏன் போகிறாய் ?



கண்ணீரில் கதையெழுதுகிறேன்
காயங்களில் வலி சுமக்கிறேன்
படித்திட முடியலையே
பாவி நெஞ்சு துடிக்குதடி

யார் யாரோ பேசுவார்
வார்த்தைகளில் வசை பாடுவார்
எதிர்த்தாள முடியுமோ - இல்லை
போர் புரியக் கூடுமோ

வெண்முகில் மழையில் நனையுமோ
சூரியன் இருளில் புதையுமோ
அள்ளி அணைத்த காதல்
அரங்கேறுமோ ?
அரவமில்லா ஆசை தான்
நிறைவேறுமோ - இல்லை 
சுடர்மிகு தெய்வங்கள் தான்
வழி காட்டுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக